கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.16க்குட்பட்ட கொங்கு நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (ஜனவரி.21) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மாமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வன், உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.