கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 29-வது வார்டுக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் K. ரங்கநாயகி இன்று (ஜனவரி.23) நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவில் முடிக்குமாறு பணியாளர்களிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 29-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் பகுதியில் நியாயவிலை கடையை கோவை மாநகராட்சி மேயர் K. ரங்கநாயகி இன்று (ஜனவரி.23) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நியாய விலை கடையில் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கோவை 29வது வார்டில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மேயர் கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 29-வது வார்டுக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவில் முடிக்குமாறு பணியாளர்களிடம் கூறினார். உடன் கோவை மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.