Mayor Ranganayaki 1

கோவை 29வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்த மேயர் ரங்கநாயகி

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதிபுதூர் 1 மற்றும் 2வது வீதியில் வார்டு குழு நிதி திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி. கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (24.01.2025) துவக்கி வைத்து பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் வடக்கு மண்டல குழுத்தலைவர் திரு. வே.கதிர்வேல், உதவி செயற்பொறியாளர் திரு. முத்துக்குமார், உதவி பொறியாளர் திரு. சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்