கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. உடனடி தீர்வுக்கான உத்தரவை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி பிறப்பித்தார்.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் திரு. மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் இ.ஆ.ப., துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையர் த. குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.