கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 67வது வார்டுக்குட்பட்ட மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி கட்டுமான பணிகளையும் மேயர் ரங்கநாயகி இன்று (ஜனவரி 29) ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மண்டல குழு தலைவர் மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், நிர்வாக பொறியாளர் இளங்கோவன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.