கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட சோமையம்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், கீரநத்தம் ஊராட்சிகளை மாநகராட்சி பகுதிகளுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைவாய்ப்பு, மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கிராம மேம்பாடு திட்டங்கள் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மேலும் வரிச்சுமை அதிகரிக்கும் என்பதால் அரசு இந்த ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் இன்று (ஜனவரி.29) கோரிக்கை கோரிக்கை மனு அளித்தார்.
உடன் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, சுகுமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.