Power Cut Announcement

கோவை டாடாபாத் துணை மின் நிலையம்: நாளை மின்தடை அறிவிப்பு

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜனவரி.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி) நாராயணகுரு சாலை, சாய்பாபா காலனி, மனையியல் கல்லூரி (அவினாசிலிங்கம்), வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ். ஆர். சாலை (ஒரு பகுதி), பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை (ஒரு பகுதி) பூமார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் சாலை சுக்கிரவார்பேட்டை, மரக்கடை (ஒரு பகுதி), தெப்பக்குளமைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர்(ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, அலமு நகர் இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்செய்

மறுமொழி இடவும்