adiyogi rath

மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை

கோவை ஈஷா யோக மையம் இன்று (ஜனவரி.31) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை வேலூரில் பிப்.3ஆம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். 2025-ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோவையில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், இந்த ரத யாத்திரை பொதுமக்களுக்கு ஆதியோகியை தரிசிக்க ஊரடங்கிலுள்ள பகுதிகளில் அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவை வர முடியாதவர்களுக்கு ஊரிலேயே தரிசனம் செய்ய உதவுவதற்கும் நடத்தப்படுகிறது

2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு டிசம்பர் 11-ஆம் தேதி துவக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தாம்பூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். மேலும், வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்கும் ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

adiyogi rath1 adiyogi rath2 adiyogi rath3 adiyogi rath4

பிப்.1 மற்றும் 2-ம் தேதி ஆற்காட்டில் இருக்கும் ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ளது. பிப். 3-ம் தேதி கருகம்புத்தூர், செண்பாக்கம் டவுன், கோனவட்டம், விருஞ்சிபுரம், பொய்கை, உசூரிலும், 4-ம் தேதி வீர ரெட்டிப்பாளையம், அரியூர், தொரைப்பாடி, வேலூர் கோட்டையிலும், 5-ம் தேதி பென்னாத்தூர், கணியம்பாடி, பாகயாம், விருப்பாச்சிபுரம், வேலப்பாடி, காட்பாடி, சத்துவச்சாரி ஆகிய இடங்களிலும் ஆதியோகியை தரிசனம் செய்யலாம்.

இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். பக்தர்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

இவ்விடத்தில் ஆண்டுதோறும் "சிவ யாத்திரை" எனும் பாத யாத்திரையும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 மரத்திலான தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளுடன் கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதேபோல், மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன.

மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள தண்டாயுதபாணி கல்யாண மண்டபத்தில் மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புக்லெட் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. இந்த ரதங்கள் அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடையும்.

புகார்செய்

மறுமொழி இடவும்