Coimbatore Municipal Corporation

கோவை மாநகராட்சியில் அனைத்து நாள்களிலும் வரி செலுத்தலாம் - ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று ஜன.28 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்களிலும் அனைத்து நாள்களும் வரி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் 5 மண்டலப் பகுதிகளில் உள்ள வரி வசூல் மையங்களில் 2024-2025-ஆம் நடப்பு நிதியாண்டின் வரிவசூல் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து நாள்களிலும் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வரிவசூல் மையங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உள்பட்ட அனைத்து வரிவசூல் மையங்களிலும் அனைத்து நாள்களிலும் வரி பெறப்படும் வசதியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புகார்செய்

மறுமொழி இடவும்