Drinking From1

கோவையில் "தென் மாநிலங்களுக்கான குழாயிலிருந்து குடியுங்கள்" என்ற சிறப்பு கருத்தரங்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அவினாசி சாலை ரெசிடென்சி டவர்ஸ் கூட்டரங்கில், இன்று (31.01.2025) இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சரவை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் ”தென் மாநிலங்களுக்கான குழாயிலிருந்து குடியுங்கள்” (Southern Regional Conference on Drinking From Tap) என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Drinking From

இந்த நிகழ்வு, கோயம்புத்தூர் மேயர் திருமதி. ரங்கநாயகி ராமச்சந்திரன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் திரு. விவேகானந்தன், மாநகராட்சி ஆணையாளர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இயக்குநர் (அம்ரூத் 2.0) திருமதி. இஷா கலியா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடத்தினர்.

இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அங்கீத் குமார் ஜெயின், துணை ஆணையாளர் திரு. த. குமரேசன், தலைமை பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) திரு. செல்லமுத்து, மண்டல குழு தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்