கோவை மாநகராட்சி 27வது வார்டு, பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை மகாலட்சுமி கோயில் முதல் ஏபிசி அப்பார்ட்மெண்ட் வரை செடிகள், மரங்கள் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த பணியை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜன.31) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பீளமேடு காவெட்டி ரங்கசாமி வீதி பகுதியில் ஆர் ஆர் டீம் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்ற பட்டு ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது.இதேபோல பீளமேடு பிளாக் மாரியம்மன் கோயில் பின்புறம் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறும், சாக்கடை மண்கள் உடனுக்குடன் வெளியேற்றுமாறும் தூய்மை பணியாளிடம் கூறினார்.
பீளமேடு சாந்தி நகர் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஜனவரி.31) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். பின்னர் மக்களிடம் குப்பைகளை, மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பீளமேடு கணக்குப்பிள்ளை வீதி அம்பிகா சில்க்ஸ் சந்து பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி இன்று (ஜனவரி.31) நடைபெற்றது. இதேபோல பீளமேடு பிளாக் மாரியம்மன் கோயில் பின்புறம் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சாக்கடை முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறும், சாக்கடை மண்கள் உடனுக்குடன் வெளியேற்றுமாறும் தூய்மை பணியாளிடம் கூறினார்.