Groundbreaking

35வது வார்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், 35வது வார்டுக்குட்பட்ட மூகாம்பிகை கோவில் வீதியில் மாநகராட்சி பொது நிதியில் ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்கான பூமி பூஜை இன்று ஜனவரி 29 அன்று கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர் ஆர். வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேற்கு மண்டல குழு தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் சம்பத், வட்ட கழக செயலாளர் குமரேசன், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சவிதா (உதவி செயற்பொறியாளர்), ராஜேஷ் (உதவி பொறியாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

புகார்செய்

மறுமொழி இடவும்