கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20க்குட்பட்ட கணபதி, கே.ஆர்.ஜி.நகர், கணபதிமாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவுற்ற இடங்களை இன்று (ஜனவரி.28) மாநகராட்சி மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.
மேயருடன் இருந்தவர்கள்:
உடன் வடக்கு மண்டல தலைவர் திரு. வே. கதிர்வேல், பகுதி கழக செயலாளர் அஞ்சுகம் எம். பழனியப்பன், மாமன்ற உறுப்பினர் அ. மரியராஜ், வட்ட கழக செயலாளர் புகழேந்தி, உதவி ஆணையர் திரு. முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு. முத்துக்குமார், உதவி நகர திட்டமிடுநர் திருமதி. சத்யா, மண்டல சுகாதார அலுவலர் திரு. ராஜேந்திரன், உதவி பொறியாளர் திரு. இளங்கோவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.