கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (27.09.2024) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை ஆகிய […] More


வால்பாறை நகரில் அண்ணா சிலை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக செப்.23 இரவு 7.30 மணி அளவில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கருமலை எஸ்டேட்டில் இருந்து அரசுப் பேருந்து வந்தது. சாலையில் இடையூறாக கார் நிறுத்தப்பட்டிருந்ததால் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர். சிறிது நேரம் கழித்து காரில் வந்தவர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, ஏன் இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு […] More

கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவரது மகள் ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பெயர் கொடுத்ததாகவும் தன் மகளைத் தவிர ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த யாரும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளாத […] More

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு தொடர்ந்து 3 முறை வராததால் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மீது கோவை மேயர் நடவடிக்கை எடுத்திருந்தார். அவரை மேயர் சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று, பிரபாகரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. More

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ளது. அதன்படி கோவை கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை (செப்.26) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. More