One Year Jail

கோவையில் சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை விதித்து தீர்ப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். இவா், பத்திரப் பதிவுத் துறையில் சேலம் மாவட்டத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.34.58 லட்சம் சொத்து சோ்த்ததாக கோபாலகிருஷ்ணன் மீதும், அவரின் மனைவி தீனா மீதும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாா் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்

இந்த வழக்கு கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். அவரின் மனைவி தீனா மீதான வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தீனாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகனரம்யா ஜன.29 தீர்ப்பளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்செய்

மறுமொழி இடவும்